முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்by கே இனியவன் 09/11/17, 07:58 pm
» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm
» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm
» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am
» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm
» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am
» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm
» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm
» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm
» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm
» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm
» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am
» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am
» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm
» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm
» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm
» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm
» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm
» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm
» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm
» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm
» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am
» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am
» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am
» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am
» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am
» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am
» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am
» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
2 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பெண்ணே நீ யார் ....?
-------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
-------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னை தாக்கிவிட்டாய்....!!!
------------------------------------------
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!
உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!
அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!
குறள் - 1082
தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
------------------------------------------
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!
உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!
அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!
குறள் - 1082
தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
--------------------------------------------
உயிரை
எடுக்க யமன் வருவான்
பாசகயிராய் எறிவான்
என்றெல்லாம் கேள்வி
பட்டிருக்கிறேன் ....!!!
மங்கை உன் கண்னை
பார்த்தபின் தான்
உணர்ந்தேன் என்னை
கொல்ல யமன்
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
குறள் - 1083
தகையணங்குறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
--------------------------------------------
உயிரை
எடுக்க யமன் வருவான்
பாசகயிராய் எறிவான்
என்றெல்லாம் கேள்வி
பட்டிருக்கிறேன் ....!!!
மங்கை உன் கண்னை
பார்த்தபின் தான்
உணர்ந்தேன் என்னை
கொல்ல யமன்
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
குறள் - 1083
தகையணங்குறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
திருக்குறளும் கவிதையும்
-------------------------------------------
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
-------------------------------------------
என்னவே என் உயிரே
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!
உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம்
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும்
அறிவுக்கும் அப்பால்
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
குறள் - 1084
தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
-------------------------------------------
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
-------------------------------------------
என்னவே என் உயிரே
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!
உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம்
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும்
அறிவுக்கும் அப்பால்
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
குறள் - 1084
தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நீ என்ன எனக்கு யமனா ..?
-------------------------------------
என்னவளே
நீ பார்த்த நொடியே
பாசக்கயிறு எறிந்து விட்டான்
நீ என்ன எனக்கு யமனா ..?
அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது
உன் கண்ணா ...?
ராமனை மயக்க வந்த
மாயமான் போல் -நீ
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?
குறள் - 1085
தகையணங்குறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
-------------------------------------
என்னவளே
நீ பார்த்த நொடியே
பாசக்கயிறு எறிந்து விட்டான்
நீ என்ன எனக்கு யமனா ..?
அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது
உன் கண்ணா ...?
ராமனை மயக்க வந்த
மாயமான் போல் -நீ
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?
குறள் - 1085
தகையணங்குறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!
----------------------------------------------------------------
என் கண் அழகியே ....!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன்
வில் போன்ற புருவம் தானடி
என்னை மிரட்டுகிறது ....!!!
விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக
படைத்த இறைவன் தானடி
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை
குற்றுகிறாள்..............!!!
குறள் - 1086
தகையணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06
மேலும் தொடரும் .....
----------------------------------------------------------------
என் கண் அழகியே ....!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன்
வில் போன்ற புருவம் தானடி
என்னை மிரட்டுகிறது ....!!!
விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக
படைத்த இறைவன் தானடி
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை
குற்றுகிறாள்..............!!!
குறள் - 1086
தகையணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06
மேலும் தொடரும் .....
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன்
சற்றே எனக்கும் நாணம் வர
தலைகுனிந்தேன் .....!!!
அதிர்ந்தேன்
உன் திரண்ட மார்பழகில்
நிமிர்த்த நேரழகில் மருண்டேன்
இரு குன்றுகளையும்
மறைக்கும் மெல்லிய ஆடை
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
குறள் - 1087
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 07
அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன்
சற்றே எனக்கும் நாணம் வர
தலைகுனிந்தேன் .....!!!
அதிர்ந்தேன்
உன் திரண்ட மார்பழகில்
நிமிர்த்த நேரழகில் மருண்டேன்
இரு குன்றுகளையும்
மறைக்கும் மெல்லிய ஆடை
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
குறள் - 1087
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 07
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!
என்னை கண்டு அஞ்சாத
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத
மங்கையும் இல்லை .....!!!
அத்தனையும் ஒரு நொடியில்
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய்
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம்
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!
குறள் - 1088
தகையணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 08
என்னை கண்டு அஞ்சாத
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத
மங்கையும் இல்லை .....!!!
அத்தனையும் ஒரு நொடியில்
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய்
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம்
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!
குறள் - 1088
தகையணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 08
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உன் அழகை கெடுக்கிறாய் ................!!!
என்னவளே
ஏனடி என்னை கண்டவுடன்
புலியை பார்த்த பெண் மானை
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை
பேரழகா ....?
அகத்தே நாணம் என்ற
பொன் அழகையும்
கொண்டவளே .எதுக்கடி
பொன் நகை அணிகலன்
அணிந்து உன் அழகை
கெடுக்கிறாய் ................!!!
குறள் - 1089
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 09
என்னவளே
ஏனடி என்னை கண்டவுடன்
புலியை பார்த்த பெண் மானை
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை
பேரழகா ....?
அகத்தே நாணம் என்ற
பொன் அழகையும்
கொண்டவளே .எதுக்கடி
பொன் நகை அணிகலன்
அணிந்து உன் அழகை
கெடுக்கிறாய் ................!!!
குறள் - 1089
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 09
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எப்படி புரிய வைப்பேன் ..?
போதையை உண்டவனுக்கும்
பேதையிடன் மாண்டவனுக்கும்
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!
பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு
காதல் உணர்வு இல்லாதவனுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும்
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!
குறள் - 1090
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 10
போதையை உண்டவனுக்கும்
பேதையிடன் மாண்டவனுக்கும்
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!
பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு
காதல் உணர்வு இல்லாதவனுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும்
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!
குறள் - 1090
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 10
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் ஆதியும் அந்தமும் ....!!!
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும்
அவள் கருமை கொண்ட கரு
விழிப்பார்வை என் உயிரையே
கொல்லும் பார்வை ...!!!
மறுமுறை பார்வை
உயிர்த்தெழும் உயிராய்
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான்
என் ஆதியும் அந்தமும் ....!!!
குறள் - 1091
குறிப்பு அறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும்
அவள் கருமை கொண்ட கரு
விழிப்பார்வை என் உயிரையே
கொல்லும் பார்வை ...!!!
மறுமுறை பார்வை
உயிர்த்தெழும் உயிராய்
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான்
என் ஆதியும் அந்தமும் ....!!!
குறள் - 1091
குறிப்பு அறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?
நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?
இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?
குறள் - 1092
குறிப்பு அறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?
நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?
இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?
குறள் - 1092
குறிப்பு அறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!
நான்
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை
பார்க்காமலும்
நான்
பார்க்காத போது அவள்
என்னை பார்ப்பதும் என்ற
பார்வை போட்டிதானடி ....?
நம் காதல் என்னும்
பயிருக்கு நீ ஊரறிய
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர்
மட்டுமல்ல
காதலை வளர்க்கும்
பன்னீரும் உண்டு .....!!!
குறிப்பு அறிதல்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
திருக்குறள் : 1093
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13
நான்
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை
பார்க்காமலும்
நான்
பார்க்காத போது அவள்
என்னை பார்ப்பதும் என்ற
பார்வை போட்டிதானடி ....?
நம் காதல் என்னும்
பயிருக்கு நீ ஊரறிய
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர்
மட்டுமல்ல
காதலை வளர்க்கும்
பன்னீரும் உண்டு .....!!!
குறிப்பு அறிதல்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
திருக்குறள் : 1093
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!
என்னவளை பார்க்கும்
வேளையில்
நிலத்தை நோக்கும்
நெற் கதிர் போல்
தலை குனிகிறாள் ....!!!
நான் அவளை பார்க்காத
நேரம் பார்த்து என்னை
பார்த்து வெட்கத்தில்
தனக்குள்ளே தனியே
சிரிக்கும் அந்த அழகு
காதலில் கிடைக்கும்
மற்றுமொரு சுகமடி .....!!!
திருக்குறள் : 1094
குறிப்பு அறிதல்
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14
என்னவளை பார்க்கும்
வேளையில்
நிலத்தை நோக்கும்
நெற் கதிர் போல்
தலை குனிகிறாள் ....!!!
நான் அவளை பார்க்காத
நேரம் பார்த்து என்னை
பார்த்து வெட்கத்தில்
தனக்குள்ளே தனியே
சிரிக்கும் அந்த அழகு
காதலில் கிடைக்கும்
மற்றுமொரு சுகமடி .....!!!
திருக்குறள் : 1094
குறிப்பு அறிதல்
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!
காதலில்
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம்
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு
பார்க்கும் அழகு அழகோ
அழகு ......!!!
நேரே பார்க்க முடியாத
வேளையில் விழியை
ஓரமாக்கி பார்க்கும் அழகை
தனக்குள்ளே
நினைத்து சிரிக்கும் அழகு
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!
திருக்குறள் : 1095
குறிப்பு அறிதல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15
காதலில்
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம்
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு
பார்க்கும் அழகு அழகோ
அழகு ......!!!
நேரே பார்க்க முடியாத
வேளையில் விழியை
ஓரமாக்கி பார்க்கும் அழகை
தனக்குள்ளே
நினைத்து சிரிக்கும் அழகு
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!
திருக்குறள் : 1095
குறிப்பு அறிதல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அகத்தால் எனக்காக நீ துடிக்கிறாய் .....!!!
எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
திருக்குறள் : 1096
குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
திருக்குறள் : 1096
குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!
நீ
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
மனம் முழுதும் நான்
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
திருக்குறள் : 1097
குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
நீ
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
மனம் முழுதும் நான்
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
திருக்குறள் : 1097
குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!
என்னை தெரியாததுபோல்
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
திருக்குறள் : 1098
குறிப்பு அறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
என்னை தெரியாததுபோல்
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
திருக்குறள் : 1098
குறிப்பு அறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் ரகசிய நாடகம் ....!!!
உன்னை எனக்கு தெரியாது
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
இரண்டு வெறுமையில்
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
திருக்குறள் : 1099
குறிப்பு அறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
உன்னை எனக்கு தெரியாது
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
இரண்டு வெறுமையில்
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
திருக்குறள் : 1099
குறிப்பு அறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!
என்
காதலை என் பார்வையால்
சொல்லிவிட்டேன் ....!!!
உன்
காதலை உன் பார்வையால்
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும்
ஊடகம் பார்வைதானடி ...!!!
இதற்கு மேல் எதற்கு
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும்
உயிர் பரிமாற்றம் ...!!!
திருக்குறள் : 1100
குறிப்பு அறிதல்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20
என்
காதலை என் பார்வையால்
சொல்லிவிட்டேன் ....!!!
உன்
காதலை உன் பார்வையால்
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும்
ஊடகம் பார்வைதானடி ...!!!
இதற்கு மேல் எதற்கு
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும்
உயிர் பரிமாற்றம் ...!!!
திருக்குறள் : 1100
குறிப்பு அறிதல்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
இன்பத்தை அள்ளி தரவல்ல...?
மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!
என் ஐயம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!
திருக்குறள் : 1101
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21
மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!
என் ஐயம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!
திருக்குறள் : 1101
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னவளே நீ மட்டும் ..?
நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!
பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!
என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!
திருக்குறள் : 1102
புணர்ச்சிமகிழ்தல்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22
நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!
பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!
என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!
திருக்குறள் : 1102
புணர்ச்சிமகிழ்தல்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
திருக்குறள் : 1103
புணர்ச்சிமகிழ்தல்
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
திருக்குறள் : 1103
புணர்ச்சிமகிழ்தல்
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எங்கே கற்று கொண்டாளோ..?
உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!
இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?
திருக்குறள் : 1104
புணர்ச்சிமகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24
உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!
இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?
திருக்குறள் : 1104
புணர்ச்சிமகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!
சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!
என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!
திருக்குறள் : 1105
புணர்ச்சிமகிழ்தல்
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25
சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!
என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!
திருக்குறள் : 1105
புணர்ச்சிமகிழ்தல்
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum