தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.


Join the forum, it's quick and easy

தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

2 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 05/09/14, 11:26 am

நம்பியது தவறோ ....!!!

உன்னை எப்போதுமே ..
பிரிந்திடமாட்டேன்
பிரிந்திட மாட்டேன்
அடிக்கடி சொன்னவனே ....!!!
அஞ்சாதே கண்ணே என்று ..
ஆறுதல் சொன்னவனே ...!!!

பிரிவு
நிச்சயமாகி விட்டதடா ...
நீ கூறிய ஆறுதலை ..
நம்பியது தவறோ ....!!!


திருக்குறள் : 1154
+
பிரிவாற்றாமை
+
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 05/09/14, 11:42 am

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!!

என்னை
காக்க விரும்பினால் ..
என்னவன் என்னை ...
பிரியக்கூடாது .....
பிரிந்த பின் அவனுடன்
சேர்வது எளிதல்ல .....!!!

என்னவனை எப்படியாவது
என்னில் இருந்து பிரிவதை
தடுத்தே ஆகணும்
இல்லாவிடில் அவனின்
துன்பத்தை என்னால் தாங்க
முடியாது ....!!!

திருக்குறள் : 1155
+
பிரிவாற்றாமை
+
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 08/09/14, 06:28 pm

நம்புதில்லை இந்த மனம் ....!!!

கண்ணாளனே....!!!
செல்லபோவது உறுதி
சொல்லப்போவதும் உறுதி
எப்படி உங்கள் மனம்
கல்லானது ...?

இங்கிருந்து துடிக்கபோகும்
என் உள்ளத்தை ஒருகணம்
சிந்தித்து பார்த்தாயா ...?
சென்றுவருவேன் கண்ணே
கலங்காதே என்றாலும்
நம்புதில்லை இந்த மனம் ....!!!

திருக்குறள் : 1156
+
பிரிவாற்றாமை
+
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 76
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 08/09/14, 06:32 pm

மெல்லிடையானதை பார் ,....!!!

என்னவனே ....!!!
நீ என்னை விட்டு பிரியும் ..
துயரத்தை கொஞ்சம் பாராயோ ..?
துன்பத்தால்
மெல்லிடையானதை பார் ,....!!!

அணிந்திருக்கும் வளையல்
தானாக கழன்று விழுந்து
என் துயரத்தை ஊரறிய
செய்துவிட போகிறது .......!!!

திருக்குறள் : 1157
+
பிரிவாற்றாமை
+
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 77
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 08/09/14, 06:37 pm

நீ இல்லாத ஊரில் வாழ்வதா ..?

உற்றார் இல்லாத ஊரிலும் ....
உறவுகள் இல்லாத இடத்திலும் ...
வாழ்வதை விட துன்பம் ....
ஏதுண்டு என்னவனே .....?

என் இனியவனே ...
அதைவிட கொடுமை ....
நீ இல்லாத இந்த ஊரில்
வாழ்வதா ..? வாழ்வின்
உயிர் பிரியும் கொடுமைக்கு
சமனல்லவா இக் கொடுமை ....!!!


திருக்குறள் : 1158
+
பிரிவாற்றாமை
+
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 78
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 08/09/14, 06:43 pm

என்னவனின் பிரிவை விட ...!!!

தொட்டால் தான் சுடும் -தீ
அதுகூட பெரியதொரு ...
துன்பத்தை தருவதில்லை ...
என்னவனின் பிரிவை விட ...!!!

காதலிலும் காமத்திலும் ...
அன்புக்குரியவரின் பிரிவு ...
தீயை விட கொடுமையான
வேதனை வடுவையும் ...
தருகிறதே .....!!!

திருக்குறள் : 1159
+
பிரிவாற்றாமை
+
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 79
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 08/09/14, 07:06 pm

பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

ஒப்புதலுக்கு துணைவனின்..
பிரிவை சம்மதிக்கும் ...
பெண்கள் பலர் உள்ளனர் .....
பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

எனக்கு தெரியவில்லை
என்னவனே உன்னை
பிரிந்த நொடியில் இருந்து
வாழ்வேனோ ...?
நீ மீண்டும் வரும் வரை
இருப்பேனோ .....?


திருக்குறள் : 1160
+
பிரிவாற்றாமை
+
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/09/14, 01:45 pm

வலியை மறைக்கிறேன் ...!!!

காதலின் வலி
காலத்துக்கும் கொல்லும்...
மரண வலி -யாரும் ..
அறியாமல் இருக்க ...
வலியை மறைக்கிறேன் ...!!!

என் துன்பங்களை ...
மறைக்க மறைக்க தான்
என் காதல் வலியும்...
ஊற்று போல் ஊறிக்கொண்டே
இருக்கிறது ....!!!


திருக்குறள் : 1161
+
படர்மெலிந்திரங்கல்
+
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 81
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/09/14, 01:48 pm

என்னவன் தந்து விட்டான் ....!!!

காதலின் துன்பத்தை
மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
மறைக்க முடியாத வலியை
என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவனே
நீ தந்த காதல் வலியை
உன்னிடமும் சொல்ல
வெட்கம் தடுகிறது ...
அத்தனை இன்பத்தை
தந்தவனே .....!!!


திருக்குறள் : 1162
+
படர்மெலிந்திரங்கல்
+
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/09/14, 01:53 pm

உயிர் வலிக்கிறது

இரு தலை
கொல்லி எறும்பு போல் ...
ஒருபுறம் காதல் வலியை..
தாங்க முடியாமல்
உயிர் வலிக்கிறது
மறு புறம் சொல்ல முடியாமல்
நாணம் தடுக்கிறது ....!!!

காதலால் ...
என்னை காவடிபோல்
ஆக்கியவனே - உன் நினைவுகள்
நாணங்கள் காவடிபோல்
ஆடவைக்கிறது ....!!!

திருக்குறள் : 1163
+
படர்மெலிந்திரங்கல்
+
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/09/14, 01:56 pm

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

என் இதயம்
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்...
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!

காதல் கடலில் நின்று
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!

திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/09/14, 02:03 pm

பகைவனாக மாறி விட்டால்...?

போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!

சில வேளை
பகைவனாக மாறி விட்டால்
என்னென்ன
வலிகளையெல்லாம்
தருவாயோ உயிரே .....!!!

திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல்
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 11/09/14, 09:49 pm

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

காதல் இன்பம்
ஊற்றுப்போன்றது
அது பெருகி பெருகி
கடலைபோல் மாறி
இன்பம் தரும் ....!!!

என்னவனே ...
பிரிந்து வாழ்வது
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து
விடலாம் - நீ தந்த துயரத்தை
அளவிடவே முடியாதடா ....!!!

திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல்
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 11/09/14, 09:57 pm

தத்தளிக்கிறேன் ...!!!

என்னவனே
காதலின் துன்பம்
நடுகடலில் தத்தளிக்கும்
படகை போன்றது ....!!!

நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!


திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 11/09/14, 10:06 pm

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

ஓ இரவே நீயும்
என்னைபோல் அநாதை
எல்லோரையும்
தூங்க வைத்திவிட்டு
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல்
வலி கொண்டவருக்கு
பகல் என்ன ..?
இரவென்ன ..?
இரவே கவலை படாதே
உன்னோடு நானும்
இருக்கிறேன் ....!!!

திருக்குறள் : 1168
+
படர்மெலிந்திரங்கல்
+
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 11/09/14, 10:23 pm

இரவுகளே நிறுத்துங்கள்

காதல் துன்பத்தில்
பெரும் துன்பம் விடியாத
இரவுகள் தான் .....!!!
நினைவுகளோடு தூங்காத ..
கண்ணுக்கு விடியல் தான்
விடுதலை .......!!!

நீண்டு போகும்
இரவுகளே நிறுத்துங்கள்
முடியவில்லை இதற்கு
மேல் நினைவுகளோடு
ஏங்கிகொண்டிருக்க .....!!!

திருக்குறள் : 1169
+
படர்மெலிந்திரங்கல்
+
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 11/09/14, 10:44 pm

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை
என் எண்ணங்களும்
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட
தூரம் போல் -என்
கண்கள் நீ இருக்கும்
இடத்தை சென்றிருந்தால்
கண்கள் கண்ணீர்
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!

திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல்
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:00 pm

கண்கள் செய்த குற்றமே ..

என்
கண்கள் செய்த குற்றமே ..
உன் மீது காதல் வந்தது ..
கண்ணே என் கண்ணே
நீ தான் என் உயிரே ....!!!

கண்ணால் தோன்றிய ...
காதல் நோயென்பதால் ...
தானே உன்னை நினைந்து ..
என் கண்கள் அழுகின்றனவோ ...?
தோற்றிவித்ததும் -நீ
துன்பப்படுவதும் - நீ


திருக்குறள் : 1171
+
கண்விதுப்பழிதல்
+
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 91

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:01 pm

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

ஏய் கண்விழியே ...
கண்டவுடன் காதல் கொண்டாய் ...
வரப்போகும் துன்பத்தை ....
அறியாமல் மயங்கினாய் .....
விரும்பினாய் .....!!!

காணவில்லை உயிரை
என்பதால் கலங்கி நிற்கிறாய்
கண் விழியே -அத்தனைக்கும்
காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

திருக்குறள் : 1172
+
கண்விதுப்பழிதல்
+
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:02 pm

என் கண்களை நினைத்து

அன்று
பார்த்த நொடியில் ..
அவரை பற்றிக்கொண்டேன்..
கண் பார்த்தால் காதல் வரும் ..
என்பதை கண்டுகொண்டேன் ...!!!

இன்று
என்னவனை நினைத்து
என் கண்கள் கலங்குகின்றன ...
என் கண்களை நினைத்து
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்
திணறுகிறேன் நான் ...!!!

திருக்குறள் : 1173
+
கண்விதுப்பழிதல்
+
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 93

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:03 pm

நீ அனுபவித்துகொள் ..!!!

என் கரு விழிகண்கள் ...
அவனை கண்டவுடம் ..
காதல் கொண்டு தவிக்கிறது ..
காதலில் விழுந்து தப்பவும் ..
முடியாமல் வாழவும்
முடியாமல் தவிக்கிறது .....!!!

பாவம் என் கண்கள்
அழுது அழுது வற்றியே
விட்டது கண்கள் ...
செய்தது நீ அனுபவித்துகொள் ..
கண்ணே.....!!!

திருக்குறள் : 1174
+
கண்விதுப்பழிதல்
+
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 94

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:04 pm

அன்று உணரவில்லை...

கடலை விட ஆழமான ....
காதலை ஏற்படுத்திய ..
என் கண்கள் ....
அன்று உணரவில்லை...
இத்தனை வலிவருமென்று ....!!!

கண்ணீரால்
நிரம்பிய கண்கள் தூங்க ..
முடியாமல் தவிக்கிறதே ...
என் கண் படும் வேதனையை ..
சொல்ல வார்த்தையே இல்லை ...!!!

திருக்குறள் : 1175
+
கண்விதுப்பழிதல்
+
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 95

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:22 pm

காரணமான கண்களே ......!!!

பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!


திருக்குறள் : 1176
+
கண்விதுப்பழிதல்
+
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:35 pm

இன்புற்ற என் கண்கள் ...

அன்று
என்னவனை பார்க்கும் போது
இழைந்து குழைந்து
இன்புற்ற என் கண்கள் ...
இன்பத்தின் உச்சத்தை ...
அனுபவித்தன ....!!!

இன்றோ ....
அழுது அழுது தேய்கின்றன ...
சொல்ல முடியாத சோகத்தை
அனுபவிக்கின்றன ..
இறுதி துளி கண்ணீர் ..
வற்றும் வரை அழுகின்றன ...!!!


திருக்குறள் : 1177
+
கண்விதுப்பழிதல்
+
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 97
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 12:48 pm

இதயத்தால் விரும்பாமல்...!!!

என்னவனே .....!!!
இதயத்தால் என்னை ..
விரும்பாமல் வார்த்தையால் ..
விரும்பியவனே - நீர்
என்றாலும் நல்லாயிரு ....!!!

என் கண்களோ ...
உன்னை காணாமல் ...
ஏங்கி ஏங்கி தவிப்பதை ...
தூக்கமின்றி தவிக்கின்றன ...
என்னவனே ஒருமுறை
வாராயோ ....!!!


திருக்குறள் : 1178
+
கண்விதுப்பழிதல்
+
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 98
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum